WTC Final...இலங்கை ரசிகர் போட்டே ஒரே ஒரு பதிவு! வச்சு செய்யும் இந்திய ரசிகர்கள்: என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இலங்கை ரசிகர் ஒருவர் புஜாராவின் ஆட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் போட்ட பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் சவுத்தாம்டனில் துவங்கியது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட, நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியது
. இதில் முதலில் இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுக்க, போதிய வெளிச்சமின்றி ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இப்போட்டியில், டிராவிட்டிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தடுப்புச் சூவர் என்றழைக்கப்படும், புஜாரா 36-வது பந்தில் தான் தன்னுடைய ரன் கணக்கை, அதாவது பவுண்டரி அடித்து துவங்கினார்.
Pujara got off the mark in the 36th delivery as a tribute to their 36 allout in the Adelaide Test inns. #Cricket
— Daniel Alexander (@daniel86cricket) June 19, 2021
இதை இலங்கை ரசிகர் ஒருவர் ட்ரோல் செய்யும் வகையில் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அடிலெய்டில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 36 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது,
அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புஜாரா இப்போது 36-வது பந்தில் தன்னுடைய ரன் கணக்கை துவங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட இந்திய ரசிகர்கள், முதலில் உங்கள் அணியின் நிலையை பாருங்க, உங்க கூட விளையாட எங்கள் பி அணியே போதும், இலங்கை அணி இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.