இலங்கை ஸ்டைல் நாவுறும் ஈரப்பலாக்காய் கறி! எப்படி செய்வது தெரியுமா?
ஈரப்பலாக்காய் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டுக்கான சத்துகள் காணப்படுகிறது. இது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் நிறைய காணப்படுகின்றது.
இதிலுள்ள ஒமேகா 3+6 , இருதய ஆரோக்கியத்துக்கும், மூளை மற்றும் மன வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் தோல் மற்றும் தலை ரோமத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.
இதனை கறி அல்லது குழம்பு செய்து சாப்பிட்டால் அழற்சி வீக்கங்கள் இருந்தாலும் கரைத்துவிடும்.
அந்தவகையில் தற்போது சூப்பரான இலங்கை ஸ்டைலில் “ஈரப்பலாக்காய் கறி” எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
- வெங்காயம் -1
- பச்சை மிளகாய் -1
- தேங்காய்ப் பால் – ¼ கப்
- பூண்டு- 4 பல்லு
- இஞ்சி – 1 துண்டு
- மிளகுப்பொடி- ¼ டீஸ்பூன்
- மிளகாய்ப்பொடி -1டீஸ்பூன்
- மல்லிப்பொடி – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப
- புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு – தேவைக்கேற்ப
- கடுகு- சிறிதளவு
- கறிவேற்பிலை- சிறிதளவு
- எண்ணெய்– 1 டீஸ்பூன்
செய்முறை
-
பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள்.
உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள்.
தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
-
ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.
வெங்காயம் மிளகாய் வெட்டி எடுங்கள்.
- எண்ணெய்யில் கடுகு தாளித்து வெங்காயம் மிளகாய் வதக்குங்கள்.
வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேற்பிலை சேர்த்துவிடுங்கள்.
-
தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
- நன்கு கொதித்து வர கிளறி இறுகிவர, மிளகுப் பொடி தூவி இறக்குங்கள். மிளகு வாசத்துடன் தாளித்த மணமும் பரவி நிறையும்.