காதலை சொன்ன இலங்கை தமிழ் பிரபலம்! பதில் கூறாமல் வீட்டிற்கு சென்ற பெண்... பின் நடந்த சுவாரசியம்
மேத்யூஸுக்கும் ஹிசானி என்ற பெண்ணிற்கும் கடந்த 2013ல் திருமணம் நடைபெற்றது.
முதலில் மேத்யூஸ் தான் ஹிசானியிடம் காதலை வெளிப்படுத்தினார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் ஏஞ்சலோ மேத்யூஸ்.
இவர் தந்தை ஒரு தமிழர் ஆவார்.
மேத்யூஸுக்கும் ஹிசானி என்ற பெண்ணிற்கும் கடந்த 2013ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மேத்யூஸ் - ஹிசானி தம்பதியின் காதல் கதை மிக சுவாரசியமானது. மேத்யூஸ் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது தான் முதலில் ஹிசானியை சந்தித்தார்.
இருவரும் நட்பான பின்னர் ஒரு நாள் தனது காதலை ஹிசானியிடம், மேத்யூஸ் முதலில் வெளிப்படுத்தினார். அதன்படி உன்னை பிடித்திருக்கிறது என கூற, அதற்கு ஹிசானி பதில் ஏதும் சொல்லாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
islandcricket
பின்னர் தனது தாயாரிடம், மேத்யூஸ் என்னை விரும்புவதாக சொன்னார், ஆனால் நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டதாக கூறினார். ஹிசானி தாயார் தனது மகள் ஒரு நல்ல ஒழுக்கம் மற்றும் தைரியமான பெண் என்பதால் அவள் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர்கள் காதலை எதிர்க்கவில்லை.
மேலும் அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளட்டும் என்றே நினைத்தார். பின்னர் மேத்யூஸிடம் தனது காதலை சொன்னார் ஹிசானி. தங்களுக்கு திருமணம் முடியும் வரை காதலிப்பதை இருவரும் வெளியில் தெரியாமல் பார்த்து கொண்டனர்.
இதையடுத்து 2013 ஜூலை 13ஆம் திகதி மேத்யூஸ் - ஹிசானி திருமணம் நடைபெற்றது.
islandcricket