தமிழ்நாடு தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறார்கள் இலங்கை தமிழர்கள்?

Tamil Nadu Sri Lankan election results
By Fathima May 04, 2021 05:37 AM GMT
Report
Courtesy: bbc tamil

திமுக ஆட்சிக்கு வந்தமை குறித்து மலையகத்தின் கண்டியைச் சேர்ந்த பச்சமுத்து விஜயகாந்தனிடம் பிபிசி தமிழ் வினவியது. கருணாநிதியை போன்றே, ஸ்டாலின் ஆட்சியை தொடர்வார் என்று தான் எண்ணுவதாக அவர் கூறுகின்றார்.

பெரும்பாலும் ஸ்டாலின் மூலமாக, தமிழர்களுக்கு விடிவு வரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

எனினும், எந்தவொரு கருத்தையும், எவரையும் நம்பி கூற முடியாது எனவும் அவர் கூறுகிறார். அதேவேளை, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு, திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் ஏதேனும் நன்மை கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, ஸ்டாலினின் தந்தை, மு.கருணாநிதி, உண்ணாவிரதம் இருந்து, நாடகமொன்றை அரங்கேற்றியதாகவும், அது உண்மையான அன்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

  எனினும், ஸ்டாலின் உண்மையான தமிழ் பற்றுக் கொண்டவர் என்று தான் உணர்வதாகவும் பச்சமுத்து விஜயகாந்தன் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த உணர்வு தொடர்பில் பச்சமுத்து விஜயகாந்தன் கருத்து தெரிவித்தார்.

திமுக என்பது, தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவை போன்றது என அவர் கூறுகின்றார். அதனால், இலங்கை தமிழர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில், அதற்கு திமுக குரல் கொடுக்கும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் குறித்து கொழும்பைச் சேர்ந்த விமலிடம் பிபிசி தமிழ் வினவியது.

  திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும், இலங்கை தமிழர் பிரச்சினையை தமது சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்தியதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழங்கில் குற்றம்சுமத்தப்பட்ட 7 பேரில் இலங்கையர்களும் அடங்குவதாக கூறிய அவர், அந்த விடயத்தையும் அரசியல் நலனுக்காகவே பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அதேபோன்று, தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்கள் இன்றும் மிக மோசமான நிலையிலேயே உள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் கூர்க் மாவட்டத்தில் திபெத் அகதிகளுக்காக முகாம் காணப்படுவதாகவும், தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் திபெத் முகாம்மிக சிறப்பாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

திபெத் அகதிகளுக்கான வாழ்வாதார உதவிகள், அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அகதி முகாம்களில் அவ்வாறான சலுகைகள் கிடையாது எனவும் அவர் கூறுகிறார். 

 கடந்த காலங்களில் காணப்பட்ட விதத்திலேயே, எதிர்வரும் காலத்திலும் இலங்கை தமிழர் பிரச்சினையை அரசியல் நலனுக்காக இந்த கட்சிகள் பயன்படுத்தும் என்கிறார் அவர்.

அதேபோன்று, இந்திய - இலங்கை மீனவப் பிரச்சினைக்கும், எதிர்காலத்தில் தீர்வு கிடைக்காது என்கிறார் விமல்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கருத்து

தமிழ்நாடு தேர்தல் முடிவை எப்படிப் பார்க்கிறார்கள் இலங்கை தமிழர்கள்? | Sri Lankan View The Tamil Nadu Election Results 

 தமிழக உடன்பிறப்புகள் தரும் முடிவை ஏற்று, அதனை எப்படி எமக்கு பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை மட்டுமே நாம் கணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கிறார்.

அதைவிடுத்து, தேர்தல் காலத்திலும் சரி, முடிவுகளின் போதும் சரி, தமிழக கட்சிகளை பற்றி, தலைவர்களை பற்றி தரக்குறைவாக பண்பற்று பேசி எமது உணர்வுகளை கொட்டக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

முதலில், அப்படி ஆத்திரப்பட நம்நாட்டு தமிழ் அரசியல் தலைமைகளும், ஏதோ பிழையே செய்யாத அதி உத்தமர்களுமல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவிக்கிறார்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பதில்

[

 மலையக தமிழர்கள் தொடர்பில் திராவிட முன்னேற்ற கழகம் நன்கு, அறிந்த கட்சி என்பதனால், மலையக தமிழர்களுக்கு திமுக பாரிய சேவையை ஆற்றும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கிறார்.

 திமுக ஆட்சியில் இருந்த காலத்திலேயே, மலையக மக்களுக்கு 4,000 வீட்டு திட்டம் கிடைத்ததாகவும் அவர் கூறுகின்றார்.

திமுகவின் பிரதிநிதிகள் மலையகத்திற்கான பயணத்தை மேற்கொண்டு, மலையக மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து, அதனூடாகவே இந்த வீட்டுத் திட்டம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைத் தலைவர் செந்தில் தொண்டமான், தாம் அந்த கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தாம் விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன், பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

 இலங்கை தமிழர்களுக்கான தீர்வை, தாம் திமுகவிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

1980ம் ஆண்டு காலப் பகுதிகளில் தமிழக அரசியல்வாதிகளுடன் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை பேணிய போதிலும், கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்துடனேயே இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தொடர்புகளை பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களிலும் தமிழக அரசியல்வாதிகளுடன் இணைந்து பயணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், தமிழ்நாட்டின் எந்தவொரு ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியாளர்களுடன் தாம் ஒன்றிணைந்து போவதாகவும், அதேபோன்று, திமுகவுடனும் தாம் ஒன்றிணைந்து போக எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவிக்கிறார்


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US