இலங்கை வன்முறை சம்பவம் - 8 பேர் உயிரிழப்பு , 219 பேர் படுகாயம்!
இலங்கையில் நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட பதற்றமான வன்முறை சூழ்நிலை காரணமாக துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
அதில் உயிரிழந்தவர்களில் ஒரு அரசியல்வாதியும் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர்.
குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
மேலும் நேற்றைய சம்பவங்களில் 219 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.