பிரித்தானியாவில் தேநீர் தொழிலில் கலக்கும் இலங்கை பெண்! அவர் ஆதரவே சாதிக்க காரணம் என நெகிழ்ச்சி
பிரித்தானியாவின் Coventry மற்றும் Warwickshireல் புதிதாக சிறியளவில் தொழில் தொடங்குவோருக்கு ஆதரவு அளிக்கும் திட்டம் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயனடைந்துள்ள இலங்கையை சேர்ந்த பெண் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Coventry மற்றும் Warwickshire Chamber of Commerce 2019 முதல் தொழில் தொடங்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் பலரும் பயனடைந்துள்ளனர்.
இந்த தொழில் திட்டத்தை தொடங்கி நடத்த ஐரோப்பிய பிராந்திய மேம்பாட்டு நிதி (ERDF), கோவென்ட்ரி சிட்டி கவுன்சில், வார்விக்ஷயர் கவுண்டி கவுன்சில்கள் நிதி உதவியை அளித்து வருகின்றன.
இது குறித்து கோவென்ட்ரி மற்றும் வார்விக்ஷயர் சேம்பர் ஆஃப் காமர்ஸில் உள்ள நிறுவன மேலாளர் ஹர்தீப் சந்து கூறுகையில், எங்கள் திட்டத்தின் மூலம் தொழில் தொடங்குவோருக்கு பொதுவாக கடினமாக இருக்கும் முதல் சில மாதங்களுக்கு முக்கிய உதவி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கமுடியும்.
மேலும் இந்த நிதியுதவி திட்டம் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதற்கு அர்த்தம் என்னவென்றால் மேலும் பல மக்கள் தங்கள் வணிகம் மற்றும் தொழிலில் மாற்றத்தை காண இதன்மூலம் உதவமுடியும்.
தொழிலைத் தொடங்குவது எவ்வளவு சவாலானது என்பதை நாங்கள் நேரடியாக அறிவோம் என கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் இலங்கையை சேர்ந்த மிரானி டி சில்வா என்ற 49 வயதான பெண் தனித்துவமான தேநீர் (tea) விற்கும் தொழிலை தொடங்கியுள்ளார்.
கடந்த 2008ல் மிரானி இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்தார். கடந்த ஆண்டு இறுதியில் தனது சொந்த ஊரான கொழும்பில் இருந்து தொழிலுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்கி, வணிக தொடக்கத் திட்டத்தின் உதவியுடன் சில மாதங்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களை ஒப்பந்தம் செய்ய தொடங்கியிருக்கிறார் மிரானி.
அவர் கூறுகையில், கோவென்ட்ரி மற்றும் வார்விக்ஷயர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செய்துள்ள உதவிகள் மகத்தானவை. எனது ஆலோசகர், சாரா ஹம்ப்ரேஸ், சமூக தளங்களில் பாரடைஸ் டீயை விளம்பரப்படுத்த எனக்கு உதவி வழிநடத்தினார்.
மற்றும் தேவைப்படும் போது உதவவும், ஆலோசனை செய்யவும் அவர் எனக்கு இருக்கிறார். அவருடைய ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் இன்று நான் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது என்றே கருதுகிறேன் என கூறியுள்ளார்.