இலங்கை-இந்தியா இடையேயான 3வது ஒரு நாள் போட்டி பாதியில் நிறுத்தம்!
இலங்கை-இந்தியா இடையேயான 3வது ஒரு நாள் போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலும் விளையாடி வருகிறது.
2-0 என இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில், 1980-க்கு பிறகு முதன் முறையாக இந்திய அணியில் 5 அறிமுக வீரர்கள் களமிறங்கினர்.
சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, சேதன் சகரியா, கௌதம் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு அறிமுகமானார்கள்.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 23 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய 147 எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்வி ஷா (49), தவான் (13), சாம்சன் (46) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மனிஷ் பாண்டே (10), சூர்யகுமார் யாதவ் (22) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
Covers On at Premadasa Stadium #INDvSL #SLvIND pic.twitter.com/JAT90t0rBz
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) July 23, 2021
மழை நின்ற நிலையில் போட்டி 47வது ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியுள்ளது.