போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது - சிக்கும் மற்றொரு தமிழ் நடிகர்?
போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நடிகருக்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீகாந்த் கைது
அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையில், நடிகர் ஸ்ரீகாந் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் என்ற கணக்கில், 40 முறை போதைப்பொருள் வாங்கி உள்ளதாகவும் ,இதற்கு ஜிபே மூலம் ரூ.4.72 லட்சம் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த போதைப்பொருள் பயன்பாட்டில், நடிகர் கிருஷ்ணாவிற்கு தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு மருத்துவப்பரிசோதனை செய்து விசாரிக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீகாந்தம், கிருஷ்ணாவும் போதை பொருள் பயன்படுத்துவதை பார்த்ததாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதீப் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |