20 ஆண்டுகளைக் கடந்த ஆழிப்பேரலை - இலங்கையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

Tsunami Sri Lanka India Thailand Indonesia
By Kirthiga Dec 26, 2024 03:43 AM GMT
Report

இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் தேசிய பாதுகாப்பு தினமான இன்று (26) நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

20 ஆண்டுகளைக் கடந்துள்ள ஆழிப்பேரலை

இந்த ஆண்டு, 'தேசிய பாதுகாப்பு தினம்' நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, முக்கிய நிகழ்வு காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவு சிலைக்கு முன்பாக நடைபெற உள்ளது. 

20 ஆண்டுகளைக் கடந்த ஆழிப்பேரலை - இலங்கையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி! | Srilanka 2 Minute Silence To 20 Years Tsunami

இன்று (26) 2004 பாக்சிங் டே சுனாமியின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும். இது இந்தியப் பெருங்கடலில் 10 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இரண்டு நிமிட மௌன அஞ்சலி

எனவே, 2004 ஆம் ஆண்டு சுனாமி மற்றும் இலங்கையில் ஏற்பட்ட ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து இன்று நாடளாவிய ரீதியில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் டிசம்பர் 26, 2004 ஞாயிற்றுக்கிழமை காலை 9.1 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த மெகாத்ரஸ்ட் பூகம்பம் ஏற்பட்டது.

20 ஆண்டுகளைக் கடந்த ஆழிப்பேரலை - இலங்கையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி! | Srilanka 2 Minute Silence To 20 Years Tsunami

அதிர்ச்சிக்கு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, பூகம்பத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் இருந்த இந்தோனேசியாவின் தலைநகரான பண்டா ஆச்சே, 100 அடி உயர அலைகளால் பேரழிவிற்கு உட்பட்டது, 100,000 இற்கும் அதிகமான உயிர்கள் காவு வாங்கப்பட்டது.

இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலத்தீவுகள், மியான்மர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளை கொந்தளிப்பான அலைகள் பின்னர் சூறையாடின.

40,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்து சேதங்களுடன் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. 

20 ஆண்டுகளைக் கடந்த ஆழிப்பேரலை - இலங்கையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி! | Srilanka 2 Minute Silence To 20 Years Tsunami

அலைகள் பல கிலோமீட்டர்கள் உள்நாட்டில் குப்பைகளைத் தள்ளி, கட்டிடங்களை இடிபாடுகளுக்குள் தள்ளியதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

2005 ஆம் ஆண்டு முதல், டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு, அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியான தேசிய நிகழ்வாக, அரசியல் தலைமையின் பங்கேற்புடன், உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

20 ஆண்டுகளைக் கடந்த ஆழிப்பேரலை - இலங்கையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி! | Srilanka 2 Minute Silence To 20 Years Tsunami

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US