கொழும்பில் திடீரென தீப்பற்றியெறிந்த பேருந்து - விசாரணைகள் தீவிரம்!
கொழும்பு 15 அளுத்மாவத்தை பகுதியில் கண்டி நோக்கி சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பேருந்து திடீரென தீப்பற்றியெறிந்துள்ளது.
திடீரென தீப்பற்றிய சுற்றுலா பேருந்து
கொழும்பு 15 அளுத்மாவத்தை பகுதியில் இருந்து கண்டி சென்றுக்கொண்டிருந்த குறித்த பேருந்து தான் தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
காலை அளுத்மாவத்தை வீதியில் தேநீர் அருந்துவதற்காக பேருந்தின் சாராதியும் நடத்துனரும் பேருந்தை நிறுத்தி, வெளியில் சென்ற போதே குறித்த சம்பவம் நிகழந்துள்ளது.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை என சம்பவ இடத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |