கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி இடைவெளி எடுக்கிறேன்! திடீரென அறிவித்த நட்சத்திர வீரர்... இலங்கை ஜாம்பவான் சங்ககாரா கூறிய கருத்து
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் இடைவெளி எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு சங்ககாரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ், தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையின்றி இடைவெளி எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் விரல் காயத்தில் இருந்து குணமடைந்து, தனது மன நலனில் கவனம் செலுத்த அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற ஓய்வு எடுத்து வருவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில் ஸ்டோக்ஸின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரா, அவரது மன நலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.