சமூக வலைதளங்களில் மத அவதூறு: புதிய சட்டத்தை பிறப்பிக்கும் இலங்கை அரசு

Facebook Twitter Sri Lanka Social Media
By Sibi May 29, 2023 10:44 AM GMT
Report

இலங்கையில் சமூக வலைதளங்களில் மதங்களுக்கு எதிராக தவறான கருத்துகளை, பரப்புபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

சமூக வலைதளங்களில் மத அவதூறு

இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதூறுகள் மற்றும் இணையவழி கசப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த, புதிய சட்டத்தை பிறப்பிக்க போவதாக, அந்நாட்டின் மத விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மத அவதூறுக்கு எதிராக புதிய சட்டத்தை அறிவித்த இலங்கை அரசு@getty images

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, ஸ்டாண்ட்-அப் காமெடியனான நதாஷா எதிரிசூரியா மதங்கள் குறித்து, சில இழிவான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எதிரிசூரியா மன்னிப்புக் கேட்டுள்ளார். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கடந்த மே 21ஆம் திகதி அவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் மத அவதூறுக்கு எதிராக புதிய சட்டத்தை அறிவித்த இலங்கை அரசு@file photo

இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதூறு சம்பவங்களை தடுக்க, விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.

புதிய சட்டம்

இதன் மூலம் சமூக ஊடகங்களில் மதத்தை இழிவுபடுத்தும் அனைத்து சம்பவங்களும், தடுத்து நிறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் எதிரிசூரியவின் கருத்துக்கள் தொடர்பான சர்ச்சைகள் ஒரே ஒரு சம்பவம் அல்ல. இம்மாத தொடக்கத்தில், மத அவதூறை பரப்புவதாக ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றம் சாட்டப்பட்டார்.

சமூக வலைதளங்களில் மத அவதூறுக்கு எதிராக புதிய சட்டத்தை அறிவித்த இலங்கை அரசு@twitter

இந்நிலையில் கடந்த மே 15 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுபோன்ற அறிக்கைகள் நாட்டில் மத மோதல்களை உருவாக்கக்கூடும் என்று வாதிட்டு, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் கடந்த ஜனவரி மாதம், புத்த பெருமானின் புனிதப் பல்லக்கு குறித்து இழிவான கருத்துக்களை வெளியிட்டதற்காக, பிரபல யூடியூபர் செப்பல் அமரசிங்க பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US