டி20 போட்டி: இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்திய இலங்கை! வெற்றிக்கு பின்னர் நெகிழ்ச்சியுடன் கேப்டன் தசுன் ஷனகா பேசிய வார்த்தைகள்
டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவை இலங்கை அணி வீழ்த்திய நிலையில் வெற்றிக்கு பின்னர் அணித்தலைவர் தசுன் ஷனகா பேசியுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து தொடர் 1-1 என, சமநிலை அடைந்தது. வெற்றிக்கு பின்னர் பேசிய இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, குறைந்த ரன்களில் இந்தியாவை கட்டுப்படுத்தினால் வெற்றி இலக்கை அடையலாம் என நினைத்திருந்தேன்.
முதல் ஆறு ஓவர்களில் எங்களால் சரியாக பயன்படுத்த முடியவில்லை. ஆனால் டிடிஎஸ் மற்றும் ஹசரங்கா சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த வாய்ப்புக்காக பிசிசிஐ மற்றும் இலங்கை கிரிக்கெட்டுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் இது இந்த நேரத்தில் அந்த இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு என கூறியுள்ளார்.