கடைசி 2 ஓவர்களில் திருப்புமுனை: த்ரில் வெற்றி பெற்றது இலங்கை
இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே நல்ல அடித்தளம் அமைந்தது.
தவான்(40), ருத்ராஜ் கெயிக்வாட்(21) முதல் விக்கெட்டிற்கு 49 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.
தேவத் பட்டிக்கல்(29), சஞ்சு சாம்சன்(7) ஓட்டங்களுடனும் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 16.4 ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் வந்த புவனேஷ்வர் குமார் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் கடைசி சில ஓவர்களில் கூட மிகவும் நிதானமாகவே விளையாடினர். 12 பந்துகளை சந்தித்த நிதிஷ் ராணா(9), புவனேஷ்வர் குமார் 11 பந்துகளை சந்தித்து(13) ஓட்டங்களை எடுத்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
அவிஷிங்கா ஃபெர்னாண்டோ 11 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மறுமுணையில் ஆடிய மற்றொரு ஓப்பனிங் வீரர் மினோத் பனுக்கா 36 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால் இதன் பின்னர் வந்த சதீரா சமராவிக்ரமா (8), தசுன் சனக்கா (3) வானிண்டு ஹசரங்கா ( 15) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இலங்கை அணி 105 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்றது.
ஆனால் அந்த அணியின் தனஞ்ஜெய சில்வா முடிவை மாற்றி அமைத்தார். கடைசி 2 ஓவர்களில் அந்த அணிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது அதிரடி காட்டிய தனஞ்செயா (40*) வெற்றிக்கு உதவினார். இதனல் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.