லண்டனில் கொல்லப்பட்ட இலங்கையர் யாருடன் வசித்தார்? வாழ்வை மாற்றிக் கொள்ள பிரிட்டன் வந்தவருக்கு நேர்ந்த கதி... முக்கிய தகவல்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இலங்கையர் யாருடன் தங்கியிருந்தார் என்பது தெரியவந்துள்ளதோடு, சில முக்கிய தகவல்களும் வெளிவந்துள்ளது.
லண்டனின் டவர் ஹாம்லட்ஸில் Ranjith Kankanamalage என்ற நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையில் Ranjith தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்தார் என தெரியவந்தது.
ஓரினச்சேர்க்கையாளரான Ranjithன் மரணம் LGBT சமூகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கொலை செய்த கொலையாளியை அடையாளம் காணும் நபர்களுக்கு £20,000 சன்மானமாக வழங்கப்படும் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மறைந்த Ranjithக்கு அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தும் வகையில் பலரும் நேற்று ஊர்வலம் செனறனர். இந்த நிகழ்வை Let Voice Be Heard என்ற மனித உரிமைகள் குழு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த குழுவானது பிரித்தானியா மற்றும் வெளிநாடுகளில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த LGBT மக்களுக்காக பிரச்சாரம் செய்யும் பணியை செய்து வருகிறது.
Let Voice Be Heardன் நிறுவனர் Maksudul Haque (29) கூறுகையில், வெறுப்பு குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இது மிக முக்கியமான பிரச்சினை. இது தொடர்பாக சமூகத்தில் குரல்கள் எழுப்பப்பட வேண்டும், எனவே இது ஒரு முக்கிய பிரச்சனை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
LGBT சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் என குடும்பத்தாரிடமிருந்தும் வெறுப்பு குற்றங்களை எதிர்கொள்கிறார்கள். கொலை செய்யப்பட்ட Ranjith Kankanamalage இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என கருதுகிறோம். ஓரினச்சேர்க்கையாளரான அவர் தனது கணவருடன் பிரித்தானியாவில் வசித்து வந்தார்.
அவர் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ளவே இங்கு வந்திருக்கிறார். டேட்டிங் செயலியைப் பயன்படுத்தும் அனைவரும் அந்நியர்களைச் சந்திக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், நீங்கள் ஒரு காபி ஷாப் அல்லது பொது இடத்தில் சந்திப்பதை உறுதிசெய்து பின்னர் அங்கிருந்து செல்லுங்கள்.
நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் உயிருக்கு நீங்களே ஆபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள் என கூறியுள்ளார்.