கனடாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலங்கை பெண் உயிரிழப்பு
கனடாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலங்கை பெண் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
கனடாவின் மார்க்காம் பகுதியின், சோலஸ் சாலையில் வசித்து வந்த பெண்ணின் வீட்டின் மீது காலை 6:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில், அந்த வீட்டில் வசித்து வந்த 20 வயதான இளம்பெண் மற்றும் 26 வயதான ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஆண் நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிசூட்டில் வீட்டில் வளர்த்துவந்த நாயும் உயிரிழந்துள்ளது.
காவல்துறை விசாரணை
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன்னதாக கடந்த ஆண்டும் இந்த வீட்டின் மீது துப்பாக்கிசூடு நடைபெற்றுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த பெண் நிலாக்ஷி ரகுதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் கெப் ரக வாகனத்தில் தப்பிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |