அப்பா உயிரிழந்தது எப்படி? கொரோனாவா? ஸ்டாலினிடம் போனில் கதறி அழும் சீமானின் வீடியோ
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை காலமானார். இதையடுத்து உடனடியாக சீமான் சிவகங்கைக்கு விரைந்தார். தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் சீமானை போனில் தொடர்பு கொண்டு, தங்கள் வருத்தத்தை பதிவு செய்தனர். அதன் படி தமிழக முதல்வரான ஸ்டாலின், சீமானை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, ஸ்டாலின், சீமானிடம் நீங்கள் எதற்கும் கலங்கவேண்டாம், இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது சீமான் நீங்கள் துணையா இருக்கிறது பெருமையாக இருப்பதாக கண்ணீர் விட்டுள்ளார்.
அண்ணன் சீமான் அவர்கள் பல மேடைகளில் கருணாநிதி அவர்களையும், ஸ்டாலின் அவர்களையும் கடும் சொற்களால் விமர்சனம் செய்திருந்தாலும், எதையும் மனதில் வைக்காமல் அண்ணன் சீமானின் தந்தை மறைவிற்கு ஸ்டாலின் அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் நெகிழச் செய்கிறது.@mkstalin @SeemanOfficial #Seeman #Stalin pic.twitter.com/IN9gZ86K37
— H.Siva Surya (@h_siva_surya) May 13, 2021
மேலும், நீங்க என் கூட இப்போ இருக்கிறது எனக்கு ரொம்ப நம்பிக்கையை கொடுக்குது. ரொம்ப பெருமையாக இருக்கிறது
இதை கேட்டதும் ஸ்டாலின் சீமானிடம் தைரியமாக இருங்கள். அப்பாவிற்கு கொரோனா இருந்ததா என்று ஸ்டாலின் சீமானிடம் கேட்டார். இதற்கு சீமான், அப்பாவிற்கு கொரோனா இல்லை, வயோதிகத்தில் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.