குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை! முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு
இந்தியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த வருண் சிங் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8ஆம் திகதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் கடுமையான காயத்துடன் மீட்கப்பட்டு பெங்களூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானதாக இந்திய விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனால் குன்னூர் அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13ல் இருந்து 14 ஆக அதிகரித்துள்ளது.
Deeply disturbed on hearing the sad news that Group Captain Varun Singh, the lone survivor of the tragic helicopter crash near Coonoor, is no more. His valour and commitment shall serve as inspiration for all and he will be living in our minds forever. pic.twitter.com/YBTVNVcEf4
— M.K.Stalin (@mkstalin) December 15, 2021
இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே குரூப் கேப்டன் வருண் சிங் இப்போது இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு கவலை அடைந்தேன்.
அவரது வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். மேலும் அவர் நம் மனதில் என்றும் வாழ்வார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.