இஸ்ரேல் மீதான நிலைப்பாடு கடுமையாக்கப்பட வேண்டும்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கருத்து
இஸ்ரேலுக்கு எதிரான கூட்டு நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக்க வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கடுமையாக்கப்பட வேண்டும்
காஸாவில் உள்ள மனிதாபிமான நிலைமைக்கு இஸ்ரேல் சரியான முறையில் பதிலளிக்கவில்லை என்றால் நமது நிலைப்பாடும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார்.
காஸாவில் அதிகரித்து வரும் பசி நெருக்கடி தொடர்பாக இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் நடவடிக்கை தேவை என்று மேக்ரான் கூறியுள்ளார்.
நிபந்தனைகளுடன் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது ஒரு தார்மீக கடமை மட்டுமல்ல, ஒரு அரசியல் தேவையும் கூட என்று மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். அடுத்த சில மணிநேரங்களில் அல்லது நாட்களில் காஸாவில் உள்ள மனிதாபிமான நிலைமைக்கு ஏற்ப எந்த நடவடிக்கையும் இல்லை என்றால்... நாம் நமது கூட்டு நிலைப்பாட்டை கடினப்படுத்த வேண்டியிருக்கும் என்று சிங்கப்பூர் விஜயத்தின் போது மேக்ரான் தெரிவித்துள்ளார்.
அதாவது மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன என்ற அனுமானத்தை கைவிட்டு, தடைகளை விதிக்க முடிவெடுக்கப்பட வேண்டும் என்றார். தென்கிழக்கு ஆசியாவில் ஒரு இராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மேக்ரான், இந்த வார தொடக்கத்தில் வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்திருந்தார்.
ஜகார்த்தாவில் வைத்து, மேக்ரானும் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவும் காஸாவைக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதைக் கண்டித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
பாலஸ்தீன அரசை
அத்துடன் பாலஸ்தீன மக்களை அவர்களின் தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
ஹமாஸ் படைகளை ஆயுதங்களைக் கைவிட செய்தல் மற்றும் இஸ்ரேலின் இருப்பு மற்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை அங்கீகரிப்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் கீழ் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் நம்பியது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய முற்றுகைக்குப் பிறகு, காஸாவில் உதவிகள் மீண்டும் வரத் தொடங்கிய போதிலும், அங்கு மனிதாபிமான நிலைமை மோசமாகவே இருந்து வருகிறது.
உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஐந்து பேரில் ஒருவருக்கு பட்டினி அச்சுறுத்தல் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளனர். இதனிடையே, ஹமாஸ் படைகளை ஒழிப்பதற்கான புதிய முயற்சி என்று கூறி இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |