நெல்லையில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் கண் திறந்த சிலை.., பக்தர்கள் நெகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூசாரி பூட்டிச்சென்றனர்.
பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.
அப்போது அம்மன் சிலையில் கண் திறந்து இருப்பதாக பக்தி பரவசத்துடன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
மேலும், அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனால் கோவிலில் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், கோவில் பூசாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ததும் கண் மூடியதாகவும் அருகே வசித்து வரும் பக்தர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |