இந்நாளை மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! சீமான் வீரவணக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு 13 நபர்கள் பலியான 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2018ல் மே 22 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நூறாவது நாள் போராட்டத்தை பொது மக்கள் நடத்தியபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் கூடிய மக்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பொது மக்கள் பலியான சம்பவத்தில் பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், 3ம் ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் ட்விட்டரில் பதிவிட்டதாவது, மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!
மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!
— சீமான் (@SeemanOfficial) May 22, 2021
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று!
மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து களப்பலியான உறவுகளுக்கு வீரவணக்கம்! pic.twitter.com/5yXxNfdIRD
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று!
மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து களப்பலியான உறவுகளுக்கு வீரவணக்கம் என அஞ்சலி செலுத்தியுள்ளார்.