முதலில் இதை நிறுத்துங்கள்... பிரித்தானியா அரசாங்கத்திற்கு விஞ்ஞானி எச்சரிக்கை
அலுவலகங்களுக்கு திரும்ப கட்டாயப்படுத்துவதை விட மக்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரித்தானியா அரசுக்கு அறிவுரை வழங்கும் SAGE விஞ்ஞானி கூறியுள்ளார்.
the Scientific Pandemic Insights Group on Behaviours (SPI-B) உறுப்பினர் பேராசிரியர் ஸ்டீபன் ரீச்சர் கூறியதாவது, வாரத்திற்கு மக்கள் தொடர்புகளின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இன்னும் மிக உன்னிப்பாகப் பார்க்கும்போது, அனைத்திற்கும் காரணம் மக்கள் வேலையில் கலந்திருப்பதால் தான்.
வீட்டிலிருந்த படி வேலை செய்யும் போது மற்றவர்களை சந்திப்பதற்கும் சமூகமயமாக்குவதற்கும் கிட்டத்தட்ட எந்த வாய்ப்பும் இல்லை என்று அவர் கூறினார்.
பிரச்சனை என்னவென்றால், மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பது தான்.
எனவே மீண்டும், பிரச்சனை பொதுமக்களின் உளவியலில் இல்லை, அது கொள்கையில் உள்ளது, இது குறிப்பிட்ட விஷயங்களைச் செய்ய மக்களை கட்டாயப்படுத்துகிறது.
அதனால்தான் மக்கள் முடிந்தால் வீட்டில் வேலை செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும் என பேராசிரியர் ஸ்டீபன் ரீச்சர் கூறியுள்ளார்.