ஜேர்மனிக்கு புயல் பெருமழை எச்சரிக்கை: வானிலை ஆராய்ச்சி மையம்
இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய புயல் மழையும் பெருவெள்ளமும் தெற்கு மற்றும் மேற்கு ஜேர்மனியை துவம்சம் செய்த நிலையில், மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு ஜேர்மனியை புயலும் மழையும் தாக்க இருப்பதாக ஜேர்மன் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பெர்லின், Brandenburg, Schleswig-Holstein மற்றும் Mecklenburg Western-Pomerania ஆகிய கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில், அடுத்த 12 மணி நேரத்தில் 80 மில்லிமீற்றர் அளவுக்கு பெருமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியத்திலிருந்து, நாளை இரவுக்குள் இடியுடன் கூடிய மழையும் மின்னலும் இருக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மக்கள் எதற்கும் ஆயத்தமாகவும், கவனமாகவும் இருக்குமாறு வானிலை ஆராய்ச்சி மையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Im Nordosten drohen in den nächsten Stunden heftige und teils gewittrig durchsetzte Starkregenfälle. Mehr dazu im aktuellen #Unwetterclip: https://t.co/XOrJU7cVpI /V
— DWD (@DWD_presse) June 30, 2021