நீட் தேர்வு முடிவு வெளியான நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்
நீட் தேர்வு முடிவு வெளியான நாளில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் மாணவன் ஒருவன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன் உயிரிழப்பு
தமிழக மாவட்டம் சிவகங்கை, செம்பனூர் கிராமத்தை சேர்ந்த புகழீஸ்வரன் என்பவரின் மகன் ராகுல் தர்ஷன் (வயது 18). இந்த மாணவர் 12-ம் வகுப்பு படித்துவிட்டு மதுரையில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்த நிலையில் நீட் தேர்வை எழுதினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதனிடையே, காரியாபட்டியில் உள்ள உறவினரான முன்னாள் எம்.எல்.ஏ சிவசாமி என்பவர் வீட்டில் தனது அண்ணன் திலக் தர்ஷனுடன் ராகுல் தர்ஷன் தங்கியிருந்தார்.
இருவரும் ஒன்றாக தூங்கி கொண்டிருந்த நிலையில் திடீரென திலக் தர்ஷன் எழுந்து பார்த்தபோது ராகுல் தர்ஷனை காணவில்லை. பின்னர் அவரை தேடி பார்த்த போது மாடியில் உள்ள மின்விசிறியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் ராகுல் தர்ஷன்.
இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நீட் தேர்வு முடிவால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |