இங்கிலாந்து வீரரை சமூக ஊடகத்தில் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த மாணவர்! நூதன தண்டனை விதிப்பு
இங்கிலாந்து கால்பந்து வீரர் கலம் வில்சனை இனரீதியாக சமூக வலைதளத்தில் திட்டிய மாணவருக்கு, ஊதியம் இல்லாத 200 மணிநேர வேலை செய்ய வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது.
கலம் வில்சன்
கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கிண்ண தொடர் போட்டி ஒன்றில், இங்கிலாந்து அணி 6-2 ஈரானை வீழ்த்தியது.
அப்போட்டியில் சாகா 2 கோல்களும், ஜுடே பெல்லிங்கம், ரஹீம் ஸ்டெர்லிங், ராஷ்ஃபோர்ட் மற்றும் ஜேக் கிரீலீஷ் தலா ஒரு கோலும் அடித்தனர்.
90வது நிமிடத்தில் கலம் வில்சன் (Callum Wilson) பந்தினை ஜேக் கிரீலீஷுக்கு பாஸ் செய்ய, அதை அவர் கோலாக மாற்றினார்.
இனரீதியாக குறிப்பிட்ட மாணவர்
இதனை குறிப்பிட்டு, அப்போது Ibukun Quadri என்ற மாணவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இனரீதியாக வில்சனை மோசமான வார்த்தையில் குறிப்பிட்டார்.
இதுகுறித்து கால்பந்து சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், தான் செய்த தவறை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, Ibukun Quadriக்கு 12 மாத சமூக ஆணை அளிக்கப்பட்டது.
அத்துடன் 200 மணிநேர ஊதியம் இல்லாத வேலை மற்றும் 10 நாட்கள் மறுவாழ்வு நடவடிக்கை ஆகிய தண்டனை அவருக்கு அளிக்கப்பட்டது.
மேலும், Quadri கட்டாய கூடுதல் கட்டணம் மற்றும் வழக்கு செலவுகள் என 114 பவுண்டுகள் மற்றும் 85 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |