அமெரிக்காவில் பாடசாலைக்கு வெளியே மாணவரை சுட்டுக்கொன்ற பொலிஸார்! பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் ஆயுதம் வைத்திருந்ததாக பாடசாலைக்கு வெளியே மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பொலிஸார்
Wisconsin நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு வெளியே, யாரோ ஒருவர் ஆயுதங்களுடன் வந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மாணவர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். ஆனால், அதிகாரிகள் கொல்லப்பட்ட மாணவரை ஒரு இளம் ஆண் என்று விவரித்ததுடன், அவர் எந்த பாடசாலையில் படித்தார் மற்றும் அவரின் வயதை குறிப்பிடவில்லை.
யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை
மேலும், அவர் துப்பாக்கியால் சுட்டாரா, எந்த வகையான ஆயுதம் வைத்திருந்தார், பாடசாலைக்குள் நுழைய முயன்றாரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பொலிஸார் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
எனினும், இதனால் வேறு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தினால் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் பீதியடைந்ததாகவும், செல்போனில் தங்களிடம் பேச பயப்படுவதாகவும் பெற்றோர் விவரித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |