மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜயின் புகைப்படத்தை உயர்த்தி காட்டிய மாணவர்கள்
தமிழக முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் விஜயின் புகைப்படங்களை மாணவர்கள் உயர்த்தி காட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உருவான சர்ச்சை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கலந்து கொள்வதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் விஜயின் புகைப்படத்தை மாணவர்கள் உயர்த்திக்காட்டினர்.
பொதுவாகவே முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், சோதனை முறையாக இருந்திருந்தால் தமிழக வெற்றி கழகத்தின் கொடி உள்ளே கொண்டு செல்வது தடுக்கப்பட்டிருக்கும்.
இதனால், முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது தபால் அலுவலக உரிமையாளர்களுக்கு தேவைப்படும் ஆவணம்.., download செய்வது எப்படி?
இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை உயர்த்தி காட்டிய மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |