ஒரே நாளில் உலகளவில் டிரெண்டான பெண்! ஹிஜாப்பை எதிர்த்தவர்களுக்கு தக்க பதிலடி
இந்தியாவில் முஸ்லீம் மாணவி ஒருவரை மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.
இந்த கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் இன்று வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மற்ற மாணவர்களுடன் உட்கார வைக்காமல் தனி அறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
அதுபோல இவர்களுக்கு வகுப்புகளும் எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பியு கல்லூரி ஒன்றில் இந்துத்துவா மாணவர்களுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் இரண்டு இந்துத்துவா மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குந்தபுராவில் உள்ள பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அந்த மாணவி அங்கிருந்து ஓடாமல் அவர்களை பார்த்து அஞ்சாமல் தனி ஆளாக நின்று எனக்கு பயம் இல்லை என்பது போல சத்தமாக கூறியுள்ளார். மாணவர்கள் இப்படி மோதி கொள்ளும் சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.