கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்துவிட்டன: ஆனால்... ஆய்வு முடிவுகள் கூறும் உண்மை
ஜேர்மனி, கிழக்கு மேற்கு என பிரிக்கப்பட்டிருந்தபோது, இரண்டையும் இணைக்க மக்கள் போராடினார்கள். ஆனால், இரண்டும் இணைந்தாலும், மக்களுக்குள் இன்னும் பிரிவுகளே அதிகம் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இரண்டு பக்கம் இருந்தவர்களுக்குள்ளும் வித்தியாசங்கள்
1989ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 9ஆம் திகதி, பெர்லின் சுவர் வீழ்ந்தது. 1990ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி, கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.
Image: Winfried Rothermel/picture alliance
இரும்புத் திரையால் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த ஜேர்மனியின் இரு பக்கங்களிலும் வாழ்ந்தவர்கள் ஒன்றாக இணைந்தாலும், இரண்டு பக்கம் வாழ்ந்தவர்களுக்குள்ளும் பொதுவான விடயங்கள் குறைவாகவே காணப்படுவதாக ஜேர்மானியர்களில் பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.
ஒற்றுமையை விட வேறுபாடுகள்தான் அதிகம்
கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் இணைந்தபின் இரு பக்கங்களில் வாழ்ந்த மக்களும் ஒற்றுமையாக ஆகியுள்ளதாக 37 சதவிகிதம் மக்கள்தான் கூறியுள்ளார்கள். 60 சதவிகிதம் பேர், ஒற்றுமையை விட வேறுபாடுகள்தான் அதிகம் என்று கூறியுள்ளார்கள்.
DW
வயதான ஜேர்மானியர்கள் மற்றும் முன்பு கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர்களைப் பொருத்தவரை, பெர்லின் சுவர் வீழ்ந்து 34 ஆண்டுகள் ஆகியும், 75 சதவிகிதத்தினர் அந்த வேறுபாடுகளைக் குறித்து நன்கு அறிந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களில் 69 சதவிகிதத்தினர் இந்த கருத்தைத்தான் கொண்டுள்ளார்கள்.
Image: Winfried Rothermel/picture alliance
ஆனால், அரசோ, வேறுபாடுகள் இருந்தாலும், நாடு ஒற்றுமையாகத்தான் இருப்பதாக கருதுவதாக, வெளியாக இருக்கும் அறிக்கை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |