சாலையில் சூட்கேசுக்குள் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் அழுகிய சடலம்: அதிர்ச்சி சம்பவத்தின் முழு பின்னணி
அமெரிக்காவில் சூட்கேசுக்குள் திணித்து இளம் பெண் பரிதாபமாக மரணமடைந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் சிக்கிய இளைஞர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத குடியேறியான 25 வயது Javier Da Silva Rojas என்பவருக்கே 2019ல் நடந்த மரணம் தொடர்பில் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரி மாதம் இறுதியில், தமது முன்னாள் காதலியான Reyes என்பவரின் குடியிருப்புக்கு சென்ற Rojas அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், குறித்த இளம் பெண்ணை மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் சுய நினைவற்று சரிந்த அவரை Rojas, கைகால்களை பிணைத்து ஒரு சூட்கேசுக்குள் திணித்துள்ளார். பின்னர் 10 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Connecticut பகுதிக்கு காரில் சென்ற Rojas அங்குள்ள வனப்பகுதியில் சூட்கேஸை கைவிட்டு சென்றுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில், இருவரும் உறவுக்கு பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில், Reyes தரையில் விழுந்ததாகவும், இதில் அவருக்கு தலையில் காயம் பட்டதாகவும் Rojas தெரிவித்துள்ளார்.
உடற்கூராய்வில் Reyes இறப்புக்கு தலையில் பட்ட காயம் அல்ல எனவும், மூச்சுத்திணறி இறந்தார் என்பதும் உறுதியானது. மேலும், Reyes குடியிருப்புக்கு Rojas சென்றுள்ளது டி.என்.ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
மட்டுமின்றி Reyes வங்கிக்கணக்கில் இருந்த 5,350 டொலர் தொகையை ஒரு வார காலத்தில் மொத்தமாக செலவு செய்துள்ளார் Rojas. தொடர்ந்து ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்க முயன்றுள்ளார்.
மேலும், Reyes அச்சத்தில் இருந்ததாகவும், தம்மை கொலை செய்ய யாரோ முயன்று வருகிறார் என தம்மிடம் கூறியதாகவும் அவரது தாயாரிடம் கூறி Rojas நம்ப வைத்துள்ளார்.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், மேலும் 2 ஆண்டுகள் கண்காணிப்பில் வைக்கப்படுவார் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.