சுபாஷ் சந்திராவின் ரூ 22,000 கோடி கடன் ரத்து: இடைக்காலத் தடை விதித்த 5 பேர் கொண்ட அமர்வு
5-member bench stays Subhash Chandra's repayment plan: சுபாஷ் சந்திராவின் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு 5 பேர் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை.
ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா முன்வைத்த ரூ. 6.5 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முந்தைய உத்தரவுக்கு, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.

முடிவை நிர்ணயிக்கும் நடுவர் (tie-breaker judge) தெரிவித்த கருத்து பெரும்பான்மை கருத்து அல்ல என்றும், அது வழக்கின் இறுதி உத்தரவு அல்ல என்றும் NCLT அமர்வு கூறியுள்ளது.
ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கௌரவத் தலைவரான சுபாஷ் சந்திரா, ஒப்புக்கொண்ட ரூ.22,007 கோடி கடனுக்கு சமர்ப்பித்த ரூ.6.5 கோடி திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில்,
தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) டெல்லி அமர்வின் மூன்று உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இழுபறிக்குப் பிறகு, இந்த வழக்கை செப்டம்பர் 1 அன்று விசாரிப்பதற்காக, தீர்ப்பாயம் திங்களன்று ஐந்து பேர் கொண்ட அமர்வை அமைத்தது.
இந்த அமர்வில் நீதித்துறை உறுப்பினர்களான அனுபிந்தர் சிங் கிரேவால், பச்சு வெங்கட் பலராம் தாஸ் மற்றும் மகேந்திர கண்டேல்வால் ஆகியோரும், தொழில்நுட்ப உறுப்பினர்களான அதுல் சதுர்வேதி மற்றும் ரவீந்திர சதுர்வேதி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பெரும்பான்மைக் கருத்து எதுவும் எழவில்லை என்றும், அதனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பாயத்தின் அசல் அமர்வு கூறியது.
கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை சந்திராவின் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, அதனைத் தீர்ப்பாயம் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தன.
அத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மதிப்பானது, சந்திராவின் சொத்து மதிப்பில் வெறும் 0.028 சதவீதம் மட்டுமே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |