இலங்கைக்கு இந்தியா உதவ தவறினால்? இதை தடுக்க முடியாது! எச்சரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி
சீனாவிற்கு, இலங்கை நெருக்கம் ஆகுவதை தவிர்க்க வேண்டும் என்றால், இந்தியா உதவ வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இலங்கை அரசு கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களில் விலை அதிகரித்துள்ளது.
இதே நிலை நீடித்தால், இலங்கையில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லூநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு, சீனா அதிகமான கடனை கொடுத்து, இலங்கையின் பொருளாதார மையங்களை கையகப்படுத்தி வருகிறது.
If India wants an ally for the Indian Ocean long term then India must give deferred interest $10 billion loan to the Rajapaksa government now or face China getting one more junior partner. Modi govt has failed in so many foreign policy issues. Let not Sri Lanka be another
— Subramanian Swamy (@Swamy39) December 30, 2021
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசிற்கு இந்திய அரசு ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் ) கடனாக வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
வெளிவிவகாரக் கொள்கையில் பல்வேறு விவகாரங்களிலும் தோல்வியடைந்திருக்கும் மத்திய அரசு இலங்கை விவகாரத்திலும் தோல்வியடையக் கூடாது.
இலங்கைக்கான கடனை உடனடியாக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஓர் நீண்டகாலப் பங்காளியை இந்தியாவால் பெற்றுக்கொள்ளமுடியும். இல்லை எனில் சீனாவிற்கு இலங்கை மிக நெருக்கமாவதைத் தவிர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.