ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் திடீரென சுகவீனம் அடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும்: அவசர எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்
நேற்று ஜேர்மன் பல்கலைக்கழகம் ஒன்றில் உணவு மற்றும் தேநீர் அருந்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Darmstadt என்ற இடத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உணவு அல்லது தேநீர் அருந்திய சுமார் ஏழு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஆறு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
அவர்கள் சாப்பிட்ட உணவு அல்லது தேநீரில் கலந்த நச்சுப்பொருள் என்னவென்று தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
ஆனால், முதல் கட்ட விசாரனையில், பல பால் பாக்கெட்களிலும் தன்ணீர் வைக்கப்பட்ட பாத்திரங்களிலும் நச்சுப்பொருள் ஒன்று கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று அந்த பல்கலைக்கழகத்தில் உணவு அல்லது தேநீர் அருந்திய யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், உங்கள் கை கால் விரல்கள் நீல நிறத்தில் மாறி, உங்களால் அசைய முடியாத நிலை ஏற்பட்டால் அது நஞ்சு உட்கொண்டதன் அறிகுறி என்றும், அப்படி ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் அசையக்கூடாது என்றும், உடனடியாக ஆம்புலன்சை அழைப்பது அவசியம் என்றும் எச்சரித்துள்ளார்கள்.