உயரும் சர்க்கரை விலை... அமைச்சர் சொன்ன விளக்கம்
Sugar production had declined due to red rot disease and El Nino: சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ சூழ்நிலைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி சரிந்து, விவசாய உற்பத்தி பாதிப்பு.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சர்க்கரை கிடைப்பது மற்றும் சில்லறை விலைகள் உயர்வது குறித்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், கச்சா சர்க்கரையை தற்காலிகமாக இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருவதாக ஒன்றிய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.

சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ நிலைமைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இது இந்தியாவிலும் உலக அளவிலும் விவசாய உற்பத்தியைப் பாதித்துள்ளதாகவும் பிரல்ஹாத் ஜோஷி கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமைச்சர், இது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம், அதனால்தான் உடனடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தியாவின் தேவை சுமார் 280 லட்சம் டன்கள், ஆனால் இன்றுவரை... நம்மிடம் 20 முதல் 25 லட்சம் டன்களுக்கும் அதிகமான உபரி சர்க்கரை உள்ளது என்றார்.
சமீபத்தில் சில்லறை சர்க்கரை விலையில் ஏற்பட்ட உயர்விற்கு மத்தியில் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறை சர்க்கரை விலையானது ஜூலை 20 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.48.18-லிருந்து ஆகஸ்ட் 20 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த உயர்வுக்குப் பல்வேறு காரணிகளின் கலவையே காரணம் என்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விவசாயிகள் வழங்கும் கரும்புக்கு அவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். மேலும், முன்னர் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது முதன்முறையாக அதை இறக்குமதி செய்வதாக அவர் மேலும் சாட்டினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |