சூட்கேஸ் கொலை வழக்கு... பெண் ஒருவருக்கு இரண்டு நாடுகளில் கிடைத்த சிறை தண்டனை
இந்தோனேசியாவின் பாலியில் சொந்த தாயாரை கொலை செய்ய உதவிய அமெரிக்க பெண்மணிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொந்த தாயாரை கொலை செய்ய
அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த 28 வயது Heather Mack என்பவரே, கடந்த 2014ல் பாலியில் சுற்றுலா சென்ற இடத்தில் சொந்த தாயாரை கொலை செய்ய உதவியதுடன், அவரது சடலத்தை சூட்கேஸில் அடைத்து தப்பிக்க முயன்றவர்.
@ap
இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான Heather Mack, விசாரணையில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு இந்தோனேசிய நீதிமன்றத்தால் 2015ல் 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.
ஆனால் 2021ல் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அமெரிக்கா திரும்பிய அவரை, உள்ளூர் பொலிசார் கைது செய்தனர். அமெரிக்க நாட்டவர் ஒருவரை வெளிநாட்டில் கொலை செய்ய உதவியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீர்ப்பை எதிர்பார்த்து சிகாகோ சிறையில் அடைபட்டிருந்தார் Heather Mack. தற்போது புதன்கிழமை அவருக்கு தீர்ப்பளிக்கப்பட்டு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிறையில் இருப்பதால், எஞ்சிய 26 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிடும். Heather Mack தமது முன்னாள் காதலனுடன் இணைந்து தாயாரின் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிப்பை சொந்தமாக்கும் பொருட்டு, கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுள் தண்டனைக்கு வாய்ப்பிருப்பதாக
சம்பவத்தின் போது 18 வயதேயான Heather Mack கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் சுற்றுலா சென்ற இடத்தில், பணத்திற்காக சொந்த தாயாரை கொலை செய்ய உதவியுள்ளார். அத்துடன் சடலத்தை சூட்கேஸில் அடைத்து மறைவு செய்துள்ளனர்.
@ap
ஹொட்டல் அறையில் கொலை செய்யப்பட்டு சடலத்தை சூட்கேஸில் அடைத்து, Heather Mack மற்றும் அவரது காதலன் ஆகியோர் வாடகை டாக்ஸி ஒன்றில் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அந்த சூட்கேஸை அவர்கள் டாக்ஸியிலேயே விட்டுச் சென்ற நிலையில், டாக்ஸி சாரதி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் அந்த தம்பதி இன்னொரு ஹொட்டலில் தங்கியிருந்ததை கண்டறிந்தனர்.
அமெரிக்காவில் நடந்த விசாரணையில் Heather Mack மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் ஆயுள் தண்டனைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தமது குற்றத்தை Heather Mack ஒப்புக்கொண்டார் என்றே கூறப்படுகிறது.
Heather Mack-ன் காதலன் தற்போதும் இந்தோனேசிய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |