இரட்டைஇலை சின்னத்துக்காக நடந்த மோசடியில் சிக்கிய நபருடன் இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை! சர்ச்சை புகைப்படம்
மோசடி மன்ன சுகேஷ் சந்திரசேகருடன், இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுகேஷ் சந்திரேசகர் என்ற பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்காக அதிமுக - அமமுக இடையே போட்டி இருந்தது.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர்.
அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிறையில் இருந்து கொண்டும் கூட சுகேஷ் சும்மா இல்லை. ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்டார். அவரது அப்போதைய காதலி, லீனா மரியா மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டார். லீனா தமிழில் பிரியாணி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இடைக்கால ஜாமீனில் வெளியில் சுகேஷ் சந்திரசேகர் தற்போது பாலிவுட் பிரபலம் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடன் ரொமான்டிக்காக ஒரு ஃபோட்டோ எடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதுவும் அந்த செல்ஃபியில் தெரியும் ஐஃபோன் 12 ப்ரோ, அமலாக்கத் துறையினர் விசாரணையின் போது கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்திய ஃபோன் என்பது கூடுதல் தகவல். அந்த ஃபோனில் சுகேஷ் இஸ்ரேல் நாட்டில் பெறப்பட்ட சிம்மைப் பயன்படுத்தி வந்தார்.
அண்மையில் ஜாக்குலின், சுகேஷ் காதல் பற்றி கிசுகிசு செய்திகள் வெளியாக அதனை ஜாக்குலின் திட்டவட்டமாக மறுத்துவந்தார். ஆனால் தற்போது அவர்கள் இருவரும் சினேகமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிதி சிங் அளித்த புகாரின் பேரில் ஜாக்குலின் ஃபெர்னாண்டாஸும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவலாகும்.