கோடைக்காலத்தில் சருமம் மிகுந்த பாதிப்பு அடையுதா? இதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்
நமது சருமத்தை ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
அதிலும் கோடைக்காலத்தில் சருமத்தை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பது அவசியம். ஏனெனில் கோடை காலத்தில் அதிகப்படியான சூரிய ஒளி சருமத்தில் பட வாய்ப்புகள் அதிகம்.
இந்த காலத்தில் சருமம் உடல் வெப்பநிலையை குறைத்து சருமத்தில் எண்ணெய்களை வெளியேற்றும். இதனால் பருக்கள், வியர்வை மற்றும் தடிப்புகள் போன்ற பிரச்சனைகளும் வருகின்றன.
எனவே நீங்கள் கோடை காலத்திற்கு என்றே தனியான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அந்தவகையில் தற்போது கோடை காலத்தில் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
- ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி மிச்சியில் போட்டு அதனுடன் 50 மிலி பால் மற்றும் 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை முகத்தில் பூசி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
-
நன்குபழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதியை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பின்னர் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
-
2 டீஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம்
- .
2 டீஸ்பூன் அரைத்த நெல்லிக்காய் விழுதுடன் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். இந்த கலவை நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவவும்.