இதயமே நொறுங்கிப்போனது போலிருக்கிறது... சுந்தர் பிச்சை முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரை இந்தியாவுக்கு உதவ உறுதி
கொரோனாவின் முதலாவது அலையை பாராட்டத்தக்க விதத்தில் சமாளித்த இந்தியா, தற்போது இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 3.52 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 2,800 பேர் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்துவரும் சுந்தர் பிச்சை முதல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரை இந்தியாவுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்கள்.
கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது முதல் பல்வேறு நோக்கங்களுக்காக 135 கோடி ரூபாயை GiveIndia மற்றும் UNICEF ஆகிய அமைப்புகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, இந்தியாவில் கொரோனா நிலைமை மோசமடைவதைக் கண்டு தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தோ அமெரிக்கரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்துவருபவருமான சத்யா நாதெல்லா (Satya Nadella), இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலைமை கண்டு தன் இதயமே நொறுங்கிப்போனது போல் உணர்வதாகவும், தனது நிறுவனம், தொடர்ந்து, பொருளாலும் தொழிநுட்பத்தாலும் இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகளில் உதவ இருப்பதாகவும், ஆக்சிஜன் உருவாக்கும் கருவிகள் வாங்க உதவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு உதவ அமெரிக்காவும் முன்வந்துள்ளதற்காக தான் அமெரிக்கவுக்கு நன்றி செலுத்துவதாக சத்யா தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபரான ஜோ பைடன், கொரோனாவால் அமெரிக்கா தடுமாறியபோது, இந்தியா எப்படி நமக்கு உதவியதோ, அதேபோல அதன் தேவையின் நேரத்தில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
I am heartbroken by the current situation in India. I’m grateful the U.S. government is mobilizing to help. Microsoft will continue to use its voice, resources, and technology to aid relief efforts, and support the purchase of critical oxygen concentration devices.
— Satya Nadella (@satyanadella) April 26, 2021
Devastated to see the worsening Covid crisis in India. Google & Googlers are providing Rs 135 Crore in funding to @GiveIndia, @UNICEF for medical supplies, orgs supporting high-risk communities, and grants to help spread critical information.https://t.co/OHJ79iEzZH
— Sundar Pichai (@sundarpichai) April 26, 2021