புகழ்பெற்ற சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1,000 கோடி வருவாயை மறைத்தது அம்பலம்! சிக்கிய தங்க நகைகள்
புகழ்பெற்ற சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ஆயிரம் கோடி வருவாய் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் கடந்த 1 ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வந்தனர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு, கணக்கில் வராத முதலீடு ஆகியவை அடிப்படையில் புரசைவாக்கம், தியாகராய நகர் ,குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் ஆகிய கடைகளில் நடந்த வருமான வரி சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமாகியுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையில் ₹1000 கோடி அளவுக்கு விற்பனையை மறைத்தது கண்டுபிடிப்பு. ₹80 கோடி போலி போட்டது அம்பலம். ₹150 கோடிக்கு கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டது வரவு வைக்காததும் தெரியவதுள்ளது@m_solamon pic.twitter.com/tPVLthrDrP
— Sridhar vasu (@s88_sridhar) December 7, 2021
சென்னை, மதுரை, கோவை,நெல்லையில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 6 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வருமானவரித் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜவுளி நகைகள் பிரிவில் கணக்கில் வராத 150 கோடி மூலம் பொருட்கள் கொள்முதல் நடந்துள்ளது. போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி வருவாயை மறைத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.