295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான ரயில்.., எது தெரியுமா?
பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
அந்தவகையில், இந்தியாவின் மிக நீளமான ரயில் எது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
இந்தியாவின் மிக நீளமான ரயில் சூப்பர் வாசுகி ஆகும். இது 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேலும் இந்த ரயிலில் 295 பெட்டிகள் உள்ளன.
இவற்றை ஒரு முனையில் இருந்து எண்ணுவது என்பது கடினமானது. இது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீளமான சரக்கு ரயில் ஆகும்.
இந்த சூப்பர் வாசுகி ரயில், 6 என்ஜின்கள் ஒன்றாக இணைந்து இழுக்கப்படுகின்றன.
மேலும், சூப்பர் வாசுகி ரயில், ஒரு ரயில்வே குறுக்கே கடந்து செல்ல கணிசமான நேரம் எடுக்குமாம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு இந்த ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ரயில், ஒரே பயணத்தில் சுமார் 27,000 டன் நிலக்கரியை எடுத்துச் செல்கிறது.
மேலும், நாக்பூருக்கு அருகிலுள்ள கோர்பாவில் இருந்து ராஜ்நந்த்காவ்ன் வரையிலான தூரத்தை கடக்க சுமார் 11.20 மணிநேரம் ஆகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |