கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறுவது., உயர்நீதிமன்றத்தின் வேலையல்ல - உச்சநீதிமன்றம்
தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு
கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைஃப்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முன்னதாக, படத்தைப் பற்றி பேசும்போது நடிகர் கமல்ஹாசன் 'தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அங்கு திரைப்படம் வெளியிடப்படவில்லை.
அத்துடன் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர் அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துவிட்டார்.
உச்ச நீதிமன்றம் கேள்வி
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தற்போது 'தக் லைஃப்' படத்திற்கு கர்நாடகாவில் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது.
மேலும், "திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உருட்டி செய்ய வேண்டும். நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்?" என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |