கோஹ்லி இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட ஜெயிக்கலையே! சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை பலரும் விமர்சித்து வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா கோஹ்லியின் கேப்டன்சிப் குறித்து பேசியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணில் தோல்வியை சந்தித்தது. கோஹ்லி இல்லாமல் இந்திய அணி ஒரு சில முக்கிய தொடர்களை ஜெயித்துள்ளது, குறிப்பாக அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் கோஹ்லி விலக, ரஹானே தலைமையிலான இந்திய அணி மீண்டு வந்து தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
அதுமட்டுமின்றி ரோகித்சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இதனால் கோஹ்லி கேப்டன் பொறுப்பு நீடிக்குமா? இல்லையா? என்பதை வரவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நிர்ணயிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கோஹ்லி குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், கோஹ்லி நம்பர் 1 கேப்டனாக இருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன். அவர் நிறைய சாதித்துள்ளார் என்பதை அவரது ரெக்கார்ட்ஸ் சொல்கிறது.
அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன்.
கோலி ஒரு ஐசிசி கோப்பைகூட வெல்லவில்லை என்று நீங்கள் விமர்சிக்கிறீர்கள். ஆனால் அவர் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைகூட வெல்லவில்லை. அவருக்கு மேலும் சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.