விராட் கோஹ்லி ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை! இதை பற்றி கேட்கிறீங்க... கிண்டலடித்த சுரேஷ் ரெய்னா
விராட் கோஹ்லியால் இன்னும் ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை என சுரேஷ் ரெய்னா கிண்டலாக பேசியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி மூன்று பிரிவுகளிலும் நீடிப்பது சரியானதுதானா என்பது குறித்துப் பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் ஒரு கோப்பையைக் கூட கோஹ்லி தலைமையில் இந்திய அணி வென்றதில்லை. 2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பின்ஸ் டிராபி, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அனைத்திலும்
இறுதிவரை சென்றும் கோஹ்லியால் கோப்பையை வென்றுதர முடியவில்லை. அதேசமயம், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் கேப்டனாக நீண்டகாலமாகத் தொடரும் கோஹ்லியால் அந்த அணிக்கு இதுவரை ஒரு கோப்பையைக் கூட பெற்றுத் தரமுடியவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டியில், விராட் கோஹ்லி நம்பர் ஒன் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை என்று நினைக்கிறேன்.
அவர் நிகழ்த்திய சாதனையின் மூலம் இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். உலக கிரிக்கெட்டிலும் விராட் கோலி நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அதற்கான பல சாதனைகளை கோஹ்லி செய்துள்ளார்.
ஐசிசி கோப்பை பற்றி கேட்கிறீர்கள், விராட் கோஹ்லி தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இந்திய அணி வென்றதில்லை. ஐபிஎல் தொடரில் கூட கோஹ்லியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை கோஹ்லிக்கு இன்னும்கூட சிறிதுகால அவகாசம் கொடுக்கலாம்.
டி20 உலகக் கோப்பை வருகிறது.
அதன்பின் ஒருநாள் உலகக் கோப்பை வருகிறது. இவை இரண்டிலும் அவருக்கு வாய்ப்பளிக்கலாம் என கூறியுள்ளார்.