பிரித்தானியாவை உலுக்கி வரும் எம்.பி. மரணம்! கொலையாளியின் பெயர், விபரம் வெளியானது
பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினரான Sir David Amess வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
எம்.பியின் இந்த மரணம் பிரித்தானியாவையே உலுக்கியுள்ளது. குறிப்பாக பிரதமர் போரிஸ்ஜோன்சன் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியிலும், மிகுந்த மனவேதனையிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் சோமாலியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது அந்த நபரின் பெயர் Ali Harbi Ali பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 25 வயது மதிக்கத்தக்க இந்த நபரே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஆனால், பொலிசார் இது குறித்து எந்த ஒரு தகவலை வெளியிடவில்லை. அதே சமயம் அவரின் பெயர் Ali Harbi Ali எனவும், இவர் பிரித்தானியாவில் இஸ்லாமியராக வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதச் சட்டம் 2000 பிரிவு 41 இன் கீழ் கைது செய்யப்பட்ட இவர், லண்டன் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று Westminster Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பொலிசார் அவகாசம் கேட்டுக் கொண்டதன் காரணமாக, மேலும் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 22-ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் குற்றவாளிக்கு தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் மூன்று முகவரிகளுக்குச் சென்று தேடுதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸின், கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஒரு எம்.பி. கொலை செய்யப்பட்டிருப்பது, மற்ற எம்.பிக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலைக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த தாக்குதல், எம்.பி.க்களின் பாதுகாப்பிற்காக சர்ச்சையைக் கிளப்பியது