திருவிழாக் கூட்டத்துக்குள் வேண்டுமென்றே காரை செலுத்திய நபர்: 90 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு
ஜேர்மன் நகரமொன்றில் திருவிழாவின்போது கூட்டத்துக்குள் வேண்டுமென்றே ஒருவர் காரை செலுத்தியதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
ஜேர்மன் நகரமான Volkmarsenஇல், திருவிழா ஒன்றின்போது, Maurice P. (30) என்பவர் தனது காரை வேகமாக மக்கள் கூட்டத்துக்குள் செலுத்தியுள்ளார். அதில், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட Maurice மீது 91 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் மோசமான அளவில் உடலுக்கு ஊறு விளைவித்ததாக 90 குற்றச்சாட்டுகள் மற்றும் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். இதுபோக, 150 பேர் இந்த சம்பவத்தால் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள Maurice ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை.
பொலிசாரிடம் அவர் பேச மறுப்பதால் குற்றத்துகான காரணம் இதுவரை
வெளியாகவில்லை.
பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.