ஜேர்மன் தாய் சேய் நல காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: வழக்கில் முக்கிய திருப்பம்
கடந்த மாத இறுதியில், ஜேர்மன் தாய் சேய் நல காப்பகம் ஒன்றில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
தாய் சேய் நல காப்பகத்தில் துப்பாக்கிச்சூடு
ஜூன் மாதம் 29ஆம் திகதி, வடக்கு ஜேர்மனியின் லோயர் சாக்ஸனி மாகாணத்திலுள்ள Stade என்னும் நகரில் அமைந்துள்ள தாய் சேய் நல காப்பகம் ஒன்றிற்கு வந்துள்ளார் ஃபெயித் கான். G (Fatih Khan G, 45) என்னும் நபர்.

கானுக்கும் அவரது மனைவிக்கும் தங்கள் குழந்தையை யார் வளர்ப்பது என்பது தொடர்பில் பிரச்சினை இருந்த நிலையில், கானுடைய மனைவியும், மூன்று மாதக் குழந்தையும் அந்த காப்பகத்தில் தங்கியிருந்துள்ளார்கள்.
தன் குழந்தையின் எதிர்காலம் குறித்து பேசுவதற்காக கான் அங்கு சென்ற நிலையில், திடீரென அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குண்டு பாய்ந்து, காப்பக ஊழியர்களான நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துவிட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜேர்மனியில் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், கான் கைது செய்யப்பட்டு Bremervörde என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வழக்கில் முக்கிய திருப்பம்
இந்நிலையில், சிறையிலடைக்கப்பட்டிருந்த கான், சிறையறையில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
துருக்கி பின்னணி கொண்ட கான், ஜேர்மனியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |