பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: தோழி கைது
பிரான்சில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண் வழக்கில், அவரது தோழிகளில் ஒருவரான ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு
செவ்வாய்க்கிழமை மாலை, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த Karen Carter (65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அவரது காதலரும், அவசர உதவிக் குழுவினரும் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
உடற்கூறு ஆய்வில், Karen தன்னை பயங்கரமாக தாக்க முயன்ற நபரைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தோழி கைது
இந்நிலையில், Karenஐ கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரது தோழிகளில் ஒருவரான 69 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், தன் மனைவி, அவர் மீது வன்மம் வைத்த ஒருவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என Karenஇன் கணவரான Alan அச்சம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |