கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டிய செவிலியர் வேண்டுமென்றே செய்த செயல்... ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்...
வடக்கு ஜேர்மனியில் செவிலியர் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்துக்கு பதிலாக, மக்களுக்கு உப்புக் கரைசலை செலுத்தியது தெரியவந்துள்ளதையடுத்து பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த செவிலியர் எதற்காக அப்படி செய்தார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் சமூக ஊடகங்களில் தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உப்புக்கரைசலால் மக்களுக்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது என்றாலும், தாங்கள் தடுப்பூசி பெற்றதாக நம்பிக்கொண்டிருக்கும் பலர், குறிப்பாக முதியவர்களுக்கு கொரோனா தொற்றும் அபாயம் உள்ளது.
அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளாரா, அவரது பெயர் என்ன என்பது போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், வடக்கு ஜேர்மனி அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு அப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.