விமான பணிப்பெண்ணை தவறாக சீண்டிய ஸ்வீடன் நாட்டவர்; சாக்குபோக்கு சொன்ன வழக்கறிஞர்
இண்டிகோ விமானத்தில் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
ஸ்வீடின் நாட்டவர் கைது
கடந்த வியாழக்கிழமையன்று, பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் கேபின் பணியாளர் ஒருவரை பாலியல் துன்புறுத்தில் செய்ததாக 63 வயதான ஸ்வீடின் நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட ஸ்வீடிஷ் நாட்டு பயணி கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனாஸ் வெஸ்ட்பெர்க் (Klas Erik Harald Jonas Westberg) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வியாழக்கிழமை விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமான ஊழியர்களால் மும்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
BT
பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட பயணி
விமான பணிப்பெண் உணவு பரிமாறும்போது கிளாஸ் எரிக் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கியதாகவும், விமானம் தரையிறங்கும் வரை அவர் அதைச் செய்து கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், 24 வயதான பணிப்பெண் கேப்டனிடம் இது குறித்து தெரிவித்ததையடுத்து, வெஸ்ட்பெர்க்கிற்கு சிவப்பு எச்சரிக்கை அட்டையைப் படித்ததாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிப்பெண் அளித்த புகாரில், "நான், குடிபோதையில் இருந்த வெஸ்ட்பெர்க்கிடம் (28-E இல் அமர்ந்திருந்த), விமானத்தில் கடல் உணவுகள் இல்லை என்று தெரிவித்தபோது பிரச்சனை தொடங்கியது. நான் அவருக்கு கோழி உணவுகளை வழங்கினேன். பின்னர் அவரது ஏடிஎம் கார்டுக்கு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த, கார்டை ஸ்வைப் செய்யும் சாக்கில், பயணி என் கையைப் பிடித்தார், நான் அவரது கையை எடுத்துவிட்டேன், கார்டின் பின்னை உள்ளிடச் சொன்னேன். இந்த முறை அவர் வரம்பை தாண்டிவிட்டார்.., அவர் எழுந்து, மற்ற பயணிகளின் முன்னிலையில் என்னைத் துன்புறுத்தினார், அவர் தவறாக நடந்துகொள்கிறார் என்று நான் கத்தியபோது, அவர் தனது இருக்கையில் அமர்ந்தார்." என்று கூறினார்.
வழக்கறிஞர் சொன்ன சாக்குபோக்கு
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், அவர் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும், அவரது உடல் நடுங்குவதாகவும் கூறினார். "அவரால் உதவியின்றி எதையும் பிடிக்க முடியாது. அவர் கேபின் குழுவினரைத் தொட்டபோது பிஓஎஸ் கட்டண அட்டை இயந்திரத்தைப் பிடிக்க முயன்றார். அவர் வேண்டுமென்றே அப்பெண்ணைத் தொடவில்லை" என்று கூறியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 8-வது கட்டுக்கடங்காத விமானப் பயணி இவர், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.