இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் மூவர் கைது!
சுற்றுலா விசாவில் இந்தியா வந்த சுவீடன் நாட்டவர் மூவர் பொலிஸாரால் கைது
தேவாலய பிரார்த்தனையில் கலந்துகொண்டதால் சுவீடன் நாட்டவர் மூவரும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்
சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் இந்தியாவில் வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மாநிலம் அசாமிற்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் சுற்றலாவிற்கு வந்துள்ளனர். திப்ருகார் மாவட்டத்தில் தேவாலயங்களின் அமைப்பான United Church of Christ மூலமாக மூன்று நாள் பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சுவீடன் நாட்டவர் மூவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், வெளிநாட்டினர் சட்டத்தை மீறி அவர்கள் கலந்துகொண்டதாக குற்றம்சாட்டிய பொலிஸார், தானாக முன் வந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
India Today NE
பின்னர் நடந்த விசாரணையில் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சுவீடன் சுற்றுலா பயணிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் மூவரும் சுற்றுலா விசாவில் விசாவில் இந்தியா வந்துள்ளனர்.
ANI
இந்த நிலையில் அவர்கள் மூவரையும் சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் மூவரும் இன்று கவுகாத்திக்கு அனுப்பப்பட்டு , பின்னர் சுவீடனுக்கு அனுப்பப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.